இன்று ஏப்ரல் 6 2022 கோவை மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பத்ரி நாராயணன் IPS அவர்களை பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை பொள்ளாச்சி. பொள்ளாச்சி நகராட்சி தலைவி *கா.சித்ரா ,கோவை மாவட்டம் (தெற்கு )வழக்கறிஞர் பிரிவு ,து.தலைவி ஆர் எஸ் .கீதா கோவை மாவட்டம் தெற்கு அரசியல் அணி தலைவி ருக்மணிதேவி, உறுப்பினர் மஞ்சுளாதேவி , கன்னியம்மாள் , கோவை மாவட்டம் (தெற்கு) வர்த்தக அணி பிரிவு திருமதி ஷரோன் ஷீலா மேரி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தோம் மேலும் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன் ADSP அவர்களையும் சந்தித்தோம். மேலும் நமது அமைப்பின் (பெண்கள் உரிமைகளுக்கான உலகப் பேரவை) செயல்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும், போதைப் பொருள் பற்றி (அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில்) விழிப்புணர்வு குறித்தும் , பொள்ளாச்சி காவல்துறை நமது அமைப்புக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினோம். போதைப்பொருள் விழிப்புணர்வு எவ்வாறு தருவது என்பது பற்றி ADSP அவர்கள் நமக்கு பயிற்சி அளிப்பதாகவும் உறுதியளித்தார்.
![IMG-20200505-WA0003](https://usip.news/wp-content/uploads/2021/09/IMG-20200505-WA0003.png)